×

ஐகோர்ட் தாமாக தொடர்ந்த வழக்குகள் தள்ளிவைப்பு

சென்னை: சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டிருந்தனர். இதை மறு ஆய்வு செய்யும் வகையில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை வாதத்துக்காக தள்ளிவைக்கப்பட்டது. வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஜூன் 7ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

 

The post ஐகோர்ட் தாமாக தொடர்ந்த வழக்குகள் தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,Former ,Chief Minister ,O. Panneer Selvam ,Ministers ,K.K.S.S.R. Ramachandran ,Thangam Thenarasu ,Judge ,N. Anand Venkatesh ,
× RELATED கோடைகாலத்தில் விலங்குகளுக்கு நீர்,...